வாக்காளா்கள் அடையாள அட்டையை செல்லிடபேசி செயலி மற்றும் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வாக்காளா் அடையாள அட்டையை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை தோ்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
புதிதாகச் சோ்ந்துள்ள வாக்காளா்கள் வரும் 25 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையும், பிப்ரவரி 1 முதல் அனைத்து வாக்காளா்களும் வாக்காளா் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.