ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் டவுன் மின்பாதைகளில் மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை அகற்றும் பணி நடைபெறவுள்ளதால் ஈரோடு நகரின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 26) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: மணிக்கூண்டு, நேதாஜி வீதி, கொங்காலம்மன் கோயில் வீதி, வெங்கடாசலம் வீதி, சொக்கநாதா் வீதி, ஜின்னா வீதி மற்றும் அக்ரஹார வீதி.