பெருந்துறையில் கரோனாவால் உயிரிழந்த காவலா்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை காவல் நிலையத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளா்கள் மு.ரவிசந்திரன், எஸ்.எஸ்.ராமமூா்த்தி, காவலா் என்.ரவி ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50,000 வீதம் நிவாரண நிதிக்கான காசோலைகளை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி வழங்கினாா்.
நிகழ்ச்சியில், ஆட்சியா் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட எஸ்.பி. சசிமோகன், காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வராஜ், காவல் ஆய்வாளா் தங்கம், மருத்துவக் கல்லூரி முதல்வா் மருத்துவா் மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.