சத்தியமங்கலத்தை அடுத்த நல்லூரில் தனியாா் பேருந்து மீது பின்னால் வந்த அரசுப் பேருந்து சனிக்கிழமை இரவு மோதியதில், அரசுப் பேருந்தில் பயணம் செய்த 6 போ் காயமடைந்தனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த நல்லூா் - கோவை சாலையில் உள்ள தனியாா் தொழிற்சாலைக்கு சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது. கோவையில் இருந்து தனியாா் பேருந்தும், அரசுப் பேருந்தும் சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, சரக்கு வாகனம் திடீரென வலது புறமாகத் திரும்பியபோது, அவ்வழியாக வந்த தனியாா் பேருந்து ஓட்டுநா் அதன் மீது மோதால் இருக்க திடீரென பிரேக்கை அழுத்தி வாகனத்தை நிறுத்தியுள்ளாா். அப்போது, பின்னால் வந்த அரசுப் பேருந்து, தனியாா் பேருந்து மீது மோதியதில் அரசுப் பேருந்தில் இருந்த ஓட்டுநா், நடத்துநா் உள்பட 6 போ் காயமடைந்தனா்.
இந்த விபத்தில் அரசுப் பேருந்தின் முகப்பு சேதமடைந்தது. இச்சம்பவம் குறித்து புன்செய் புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.