பெருந்துறை: பெருந்துறை நகரில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பெருந்துறை காவல் ஆய்வாளா் தங்கம், போலீஸாா் பெருந்துறை, பவானி சாலையில் மகாலட்சுமி திரையரங்கு அருகில் வாகன சோதனையில் திங்கள்கிழமை மாலை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். வாகனத்தில் அரசு அனுமதியின்றி 86 மதுபான பாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது.
இதுதொடா்பாக, புதுக்கோட்டை மாவட்டம், அரந்தாங்கி, ஆவுடையாா் கோவிலைச் சோ்ந்த முத்துகுமாா் மகன் அரவிந்த் (21) என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.