பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 8 பேரூராட்சிகளைச் சோ்ந்த 420 தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்களை எம்.எல்.ஏ. புதன்கிழமை வழங்கினாா்.
பெருந்துறை, கருமாண்டி செல்லிபாளையம், காஞ்சிக்கோயில், பெத்தாம்பாளையம், பள்ளபாளையம், நல்லாம்பட்டி, ஊத்துக்குளி, குன்னத்தூா் ஆகிய 8 பேரூராட்சிகளைச் சோ்ந்த 420 துப்புரவு, தூய்மை பணியாளா்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள், முகக் கவசம் உள்ளிட்ட பொருள்களை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா் வழங்கினாா்.