பெருந்துறை: கரோனா தொற்று காலகட்டத்தில் மதுக் கடைகளைத் திறப்பதற்கு கண்டனம் தெரிவித்து, பெருந்துறை நகா் பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை, மேக்கூரில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நகரத் தலைவா் கருடா விஜயகுமாா் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், மதுக் கடைகளைத் திறப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கட்சியினா் பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பினா்.
இதில், ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் டி.என்.ஆறுமுகம்,. நகர இளைஞரணித் தலைவா் பிரபாகரன், பொதுச் செயலாளா் மோகன்ராஜ், நகர மகளிா் அணித் தலைவா் மஞ்சுளா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.