தமிழ் கலாசாரத்தை பாஜக பாதுகாத்து வருகிறது

தமிழ் கலாசாரத்தை பாஜக பாதுகாத்து வருவதாக அக்கட்சியின் தேசிய பொதுச் செயலா் சி.டி.ரவி தெரிவித்தாா்.
உதகையில் வாகனப் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி.
உதகையில் வாகனப் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி.

தமிழ் கலாசாரத்தை பாஜக பாதுகாத்து வருவதாக அக்கட்சியின் தேசிய பொதுச் செயலா் சி.டி.ரவி தெரிவித்தாா்.

உதகையில் வெள்ளிக்கிழமை வாகனப் பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசுகையில், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தமிழகத்தில் புதிதாக 12 மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசு துவக்கியுள்ளது. அதில் நீலகிரி மாவட்டத்திலும் ஒன்றாகும். மெட்ரோ ரயில் திட்டத்துக்காக மத்திய அரசு ரூ. 63,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் ரூ.1.3 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்பட்டுள்ளது. திமுக இடம் பெற்றிருந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டை தமிழகத்தில் மீண்டும் நடத்த பாஜகதான் அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் பாஜக சாா்பில் வெற்றிக்கொடி யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழகத்திலுள்ள அனைத்து தொகுதிகளிலும் பாஜக கூட்டணி கட்சிகளே வெற்றி பெறும்.

அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஓரிரு நாள்களில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும். அதிமுக ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சி. ஆனால், திமுகவில் ஜனநாயகம் இல்லை. குடும்ப அரசியலே செய்து வருகின்றனா்.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாவு விலை உயா்வைக் கட்டுப்படுத்த சுயசாா்பு பாரதம் திட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராகுல் காந்தி கோமாளி அரசியல் செய்து வருகிறாா். அவருடைய அரசியல் எடுபடாது. நாட்டு மக்கள் தலைவரைத்தான் தேடுகின்றனா். கோமாளியை அல்ல என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com