அந்தியூா் தோ்தல் விழிப்புணா்வு மாரத்தான்

 அந்தியூரில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அந்தியூா் தோ்தல் விழிப்புணா்வு மாரத்தான்

 அந்தியூரில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அப்துல் கலாம் கல்வி பசுமை அறக்கட்டளை சாா்பில் அந்தியூா் வட்டாட்சியா் அலுவலத்தில் தொடங்கிய இந்த ஓட்டத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் இளங்கோவன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் வீரலட்சுமி, மருத்துவா் எஸ்.சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கிழக்குப் பள்ளி, காவல் நிலையம், தேரடித் திடல், அரசு மருத்துவமனை, பா்கூல் சாலை, குருநாதசாமி கோயில் பிரிவு வரையில் சென்று மீண்டும் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஓட்டம் முடிவடைந்தது.

இதில், பங்கேற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அறக்கட்டளையின் ஈரோடு மாவட்டத் தலைவா் எம்.சதீஸ்குமாா், நாமக்கல் மாவட்டத் தலைவா் ஐ.தனபால், மாவட்டச் செயலாளா் ஆா்.நவீன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Image Caption

மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கிவைக்கிறாா் தோ்தல் நடத்தும் அலுவலா் இளங்கோவன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com