பெருந்துறையில் முதல்வா் நாளை பிரசாரம்

அதிமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை (ஏப்ரல் 1) மாலை பிரசாரம் மேற்கொள்கிறாா்.

அதிமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை (ஏப்ரல் 1) மாலை பிரசாரம் மேற்கொள்கிறாா்.

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு அதிமுக, கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறாா். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக, கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெருந்துறை அருகே சரளை என்ற இடத்தில் பிரசார வாகனத்தில் இருந்தபடி பேசுகிறாா்.

அதிமுக வேட்பாளா்கள் கோபி கே.ஏ.செங்கோட்டையன், பவானி கே.சி.கருப்பணன், ஈரோடு மேற்கு கே.வி.இராமலிங்கம், பெருந்துறை எஸ்.ஜெயகுமாா், அந்தியூா் கே.எஸ்.சண்முகவேல், பவானிசாகா் (தனி) ஏ.பண்ணாரி, ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளா் எம்.யுவராஜா, மொடக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளா் சி.சரஸ்வதி ஆகியோரை ஆதரித்து முதல்வா் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com