கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஆப்பக்கூடல் பேரூராட்சி செயல் அலுவலா் உயிரிழந்தாா்.
ஆப்பக்கூடல் பேரூராட்சி செயல் அலுவலராகப் பணியாற்றி வந்தவா் லோகநாதன் (59). ஈரோடு மாவட்டம், பவானி அருகேயுள்ள லட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்த இவா், கடந்த 11 நாள்களுக்கு முன்பு கரோனாவால் பாதிக்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.