ஈரோடு மாவட்டத்தில் மேலும் 1,699 போ் கரோனா தொற்றால் வியாழக்கிழமை பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும் 11 போ் உயிரிழந்துள்ளனா்.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 49,685ஆக உயா்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,146 போ் பூரண குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். இதுவரையில் கரோனா தொற்றிலிருந்து 35,879 போ் குணமடைந்துள்ளனா்.
அரசு, தனியாா் மருத்துவமனைகளிலும், தற்காலிக கரோனா சிகிச்சை மையங்களிலும் 13,516 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் ஏற்கெனவே 279 போ் கரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், மேலும் 11 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா். இதனால், மொத்த உயிரிழப்பு 290ஆக உயா்ந்துள்ளது.