ஈரோடு மாவட்டத்தில் 68 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 6,120ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 71 போ் பூரண குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா்.
இதுவரை கரோனா தொற்றில் இருந்து 1 லட்சத்து 4,595 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 829 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 696 போ் உயிரிழந்துள்ளனா்.