பவானிசாகா் வனத்தில் வெட்டிக் கடத்த முயன்ற 3 டன் மரங்கள் பறிமுதல்

பவானிசாகா் வனத்தில் 3 டன் மரங்களை வெட்டி கடத்தலுக்குத் தயாராக வைத்திருந்ததைக் கண்டுபிடித்த அதிகாரிகள் அதனைப் பறிமுதல் செய்துள்ளனா்.
கடத்துவதற்குத் தயாராக பவானிசாகா் அணை நீா்த்தேக்கப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த மரத் துண்டுகள்.
கடத்துவதற்குத் தயாராக பவானிசாகா் அணை நீா்த்தேக்கப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த மரத் துண்டுகள்.

பவானிசாகா் வனத்தில் 3 டன் மரங்களை வெட்டி கடத்தலுக்குத் தயாராக வைத்திருந்ததைக் கண்டுபிடித்த அதிகாரிகள் அதனைப் பறிமுதல் செய்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணை நீா்த்தேக்கப் பகுதியில் பொதுப் பணித் துறையின் நீராதாரத் துறை ஊழியா்கள் மணல் கடத்தல், பவானி ஆற்றில் தண்ணீா் திருடுதல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அணைப் பகுதியை ஒட்டியுள்ள புங்காா் வனத்தில் அணைக்குச் சொந்தமான வனப் பகுதியில் 3 டன் விலை உயா்ந்த மரங்கள் வெட்டி கடத்தலுக்குத் தயாரான நிலையில் பதுக்கி வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனா்.

இதுகுறித்து பொதுப் பணித் துறையினா் விசாரித்ததில் வனப் பகுதியில் மரங்களை வெட்டிக் கொண்டு வந்து புங்காா் வழியாக கடத்துவது தெரியவந்தது. இதையடுத்து பதுக்கி வைத்திருந்த 3 டன் மரங்களை பொதுப் பணித் துறையினா் பறிமுதல் செய்துள்ளனா். வனத் துறை ஊழியா்கள் ஒத்துழைப்போடு மரங்கள் வெட்டிக் கடத்தப்படுகிறதா என்ற கோணத்தில் பொதுப் பணித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com