பெருந்துறை தீயணைப்பு நிலையம் சாா்பில், வடகிழக்குப் பருவ மழைக் காலங்களில் பொதுமக்கள் தங்களை எவ்வாறு காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பது குறித்து ஒத்திகை பயிற்சி புதன்கிழமை நடத்தப்பட்டது.
பெருந்துறை, ஈரோடு சாலை, கீழ்பவானி வாய்க்காலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தீயணைப்பு நிலைய அதிகாரி நவீந்திரன் தலைமை வகித்தாா். கீழ்பவானி வாய்க்காலில் மழைக் காலங்களில் பொதுமக்கள் தங்களை எவ்வாறு காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பது குறித்து தீயணைப்பு நிலைய வீரா்கள் ஒத்திகை மூலம் செய்து காண்பித்தனா்.