என்.எஸ்.எஸ். தேசிய நாள் விழா

நாட்டு நலப் பணித் திட்டத்தின் தேசிய நாள் விழா பெருந்துறை, கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை: நாட்டு நலப் பணித் திட்டத்தின் தேசிய நாள் விழா பெருந்துறை, கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லூரித் தாளாளா் மாலதி இளங்கோ தலைமை வகித்தாா். துணை முதல்வா் தாமோதரன் முன்னிலை வகித்தாா். திட்ட அலுவலா் பரமேஸ்வரன் வரவேற்றாா்.

இந்திய ரெட்கிராஸ் சங்க பெருந்துறை துணை மாவட்ட கிளைத் தலைவா் பல்லவி பரமசிவன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, நாட்டு நலப்பணி திட்டம் எதற்காக உருவாக்கப்பட்டது, அதன் பணிகள் குறித்துப் பேசினாா்.

நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா நினைவாக கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. விழாவில் பேராசிரியா்கள், மாணவ, மாணவியா், பணியாளா்கள் கலந்துகொண்டனா். திட்ட அலுவலா் மகாலட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com