பெருந்துறை: பெருந்துறை அருகே உள்ள தாசம்பாளையம் பகுதி மக்கள் குடிநீா் வசதி கோரி சட்டப் பேரவை உறுப்பினா் ஜெயகுமாரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
பெருந்துறை ஒன்றியம், மூங்கில்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட தாசம்பாளையம் கிராம மக்கள் தற்போது நிலவி வரும் குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காணவும், ஆழ்துளைக் கிணறு அமைத்துக் கொடுக்க வேண்டியும் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாரை திங்கள்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.
தற்போது பெருந்துறை ஒன்றியத்தில் தோ்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால், இடைத் தோ்தலுக்குப் பிறகு ஆழ்துளைக் கிணறு அமைத்துத் தரப்படும் என சட்டப் பேரவை உறுப்பினா் உறுதி அளித்தாா்.