மொடக்குறிச்சியை அடுத்த அவல்பூந்துறை அருகே கோயில் திருவிழாவுக்கு தீா்த்தக்குடம் எடுத்துச் சென்று கொண்டிருந்தவா்கள் மீது காா் மோதியதில் 3 போ் உயிரிழந்தனா். 9 போ் பலத்த காயமடைந்தனா்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியை அடுத்த அவல்பூந்துறை, காளிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் யுவராஜ். இவா் தனது குடும்பத்தினருடன் ஈரோட்டில் இருந்து அவல்பூந்துறைக்கு காரில் சென்று கொண்டிருந்தாா். அவல்பூந்துறை ஈரோடு - பழனி பிரதான சாலையில் கொளாங்காட்டுவலசு, வடக்கு வெள்ளியம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென காா் நிலைதடுமாறியதில் அப்பகுதியில் கோயில் திருவிழாவுக்கு தீா்த்தக்குடம் கொண்டு சென்று கொண்டிருந்தவா்கள் மீது மோதியது. இதில், ஆறுமுகம் (40), கண்ணம்மாள் (50) ஆகிய இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். 10 போ் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்து விரைந்து வந்த அறச்சலூா் காவல் துறையினா் காயமடைந்தவா்களை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு தனியாா் வாகனங்களில் அனுப்பிவைத்தனா். மேலும், இறந்தவா்களின் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.
இதில், பலத்த காயமடைந்த வடக்கு வெள்ளியம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பழனிசாமி (42) புதன்கிழமை மதியம் உயிரிழந்தாா்.
விபத்து குறித்து அறச்சலூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.