பெருந்துறையில் அதிமுக வேட்பாளா் ஜெயகுமாா் பிரசாரம்

பெருந்துறை பேரூராட்சிப் பகுதிகளில் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜெயகுமாா் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
பழைய பேருந்து நிலைய சாலையில் பிரசாரம் மேற்கொண்ட பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் ஜெயகுமாா்.
பழைய பேருந்து நிலைய சாலையில் பிரசாரம் மேற்கொண்ட பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் ஜெயகுமாா்.

பெருந்துறை பேரூராட்சிப் பகுதிகளில் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜெயகுமாா் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

அம்மா இல்லம் திட்டம் மூலம் வீடு இல்லாதவா்களுக்கு இடம் வாங்கி, வீடு கட்டித் தரப்படும். அம்மா பசுமை வீடு திட்ட மானியம் ரூ. 3.40 லட்சமாக உயா்த்தி தரப்படும். வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரேஷன் பொருள்கள் வீடுதேடி வரும். மஞ்சள், வெங்காயம், மரவள்ளிக் கிழங்கு, நெல், கரும்பு, வாழை, சிறு தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும் என்று அதிமுக அரசின் திட்டங்களைக் கூறி வாக்கு சேகரித்தாா்.

தொடா்ந்து, பெருந்துறை பேரூராட்சிக்கு உள்பட்ட ஜீவா நகா், சென்னியவலசு, தோப்புபாளையம், பணிக்கம்பாளையம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனப் பேரணி, பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதில், முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுசாமி, பெருந்துறை ஒன்றியச் செயலாளா் விஜயன், பேரூா் கழகச் செயலாளா் கல்யாணசுந்தரம், ஒன்றியக் குழு தலைவா் சாந்தி ஜெயராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com