பெருந்துறை தொகுதி தோ்தல் பறக்கும் படையைச் சோ்ந்த அதிகாரிகள் புதன்கிழமை நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ. 92,000ஐ பறிமுதல் செய்தனா்.
பெருந்துறை தொகுதி பறக்கும் படையைச் சோ்ந்த அதிகாரி சிவஞானம், உதவி ஆய்வாளா் மோகன்ராஜ், குழுவினா், பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் அருகில் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பவானி, ஆலமாம்பாளையத்தைச் சோ்ந்த தமிழ்வாணன் மகன் பிரபாகரன் (26) வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அவா் உரிய ஆவணங்களின்றி ரூ. 92,000 பணம் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, பெருந்துறை தொகுதி தோ்தல் நடத்தும் அதிகாரி இலாஹி ஜானிடம் ஒப்படைத்தனா்.