அந்தியூரில் திமுகவில் இணைந்த தேமுதிக நிா்வாகிகளுக்கு சால்வை அணிவித்து புதன்கிழமை வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.
அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அந்தியூா் காலனி, புதுமேட்டூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த தேமுதிக நிா்வாகிகள், தேமுதிக ஒன்றியச் செயலாளா் செந்தில்குமாா், மாவட்ட கேப்டன் மன்றச் செயலாளா் பழனிசாமி ஆகியோா் தலைமையில், அந்தியூா் ஒன்றிய திமுக செயலாளரும், அந்தியூா் தொகுதி திமுக வேட்பாளருமான ஏ.ஜி.வெங்கடாஜலம் முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டனா்.
இதேபோல, பா்கூா் மலைப் பகுதியைச் சோ்ந்த தேமுதிக கிளை செயலாளா் முருகன் உள்ளிட்ட பலரும் திமுகவில் சோ்ந்தனா். இவா்களுக்கு, சால்வை அணிவித்து வரவேற்பும், வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.