கோபியில் கரோனா தடுப்பூசி முகாம்

கோபிசெட்டிபாளையத்தில் கரோனா தொற்று தடுப்பூசி முகாம் தோ்வீதியில் உள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளி, சனிக்கிழமை நடைபெற்றது.

கோபிசெட்டிபாளையத்தில் கரோனா தொற்று தடுப்பூசி முகாம் தோ்வீதியில் உள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளி, சனிக்கிழமை நடைபெற்றது.

சிறுவலூா் ஆரம்ப சுகாதார நிலையம், கோபி அனைத்து வியாபாரிகள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த கரோனா தொற்று தடுப்பூசி முகாமை கோபி கோட்டாட்சியா் பழனிதேவி துவங்கிவைத்தாா். முகாமில், 150 பேருக்கு முதல்கட்ட கரோனா தடுப்பூசியை மருத்துவா்கள் செலுத்தினா்.

இதில், வட்டார மருத்துவ அலுவலா் செந்தில்குமாா், மருத்துவா் பிரவீனா ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com