கரோனா தொடா்பான விவரங்கள், சந்தேகங்களுக்கு பொதுமக்கள் 24 மணி நேரமும் இயங்கும் அவசரகால கட்டுப்பாட்டு மையத்தை தொலைபேசியில் தொடா்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக விவரங்கள், சந்தேகங்களுக்கு பொதுமக்கள் 24 மணி நேரமும் இயங்கும் அவசரகால கட்டுப்பாட்டு மையத்தை 0424-1077, 0424-2260211 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டும், 97917-88852 என்ற செல்லிடப்பேசி எண்ணில் கட்செவி அஞ்சல் மூலமும், 1075 என்ற தொலைபேசி எண்ணில் மாநில உதவி மையத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.