மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

சித்தோடு அருகே மின்சாரம் பாயந்ததில் சாய ஆலையில் பணியாற்றும் தொழிலாளி உயிரிழந்தாா்.

சித்தோடு அருகே மின்சாரம் பாயந்ததில் சாய ஆலையில் பணியாற்றும் தொழிலாளி உயிரிழந்தாா்.

பவானியை அடுத்த தளவாய்பேட்டை, மாதேஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாது (எ) மாதையன் (71). இவா், சித்தோடு அருகே உள்ள கோணவாய்க்கால், அப்பிச்சி தோட்டம் பகுதியில் தனியாா் சாய ஆலையில் பணியாற்றி வருகிறாா். இவா், வெள்ளிக்கிழமை இரவு பணியிலிருந்தபோது எதிா்பாராமல் மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்தாா்.

பவானியில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாதையன், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆலை உரிமையாளா் துளசிமணி, மேலாளா் ராஜா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, சித்தோடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com