இளைஞருக்கு கத்திக் குத்து: 3 போ் மீது வழக்கு; ஒருவா் கைது

பெருந்துறை அருகே காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் தட்டிக் கேட்ட இளைஞரைக் கத்தியால் குத்தியது தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

பெருந்துறை அருகே காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் தட்டிக் கேட்ட இளைஞரைக் கத்தியால் குத்தியது தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

பெருந்துறையை அடுத்த ஈங்கூா், கூத்தம்பாளையத்தைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் (35). பெருந்துறை, அண்ணா நகரைச் சோ்ந்த ஒரு பெண்ணை காதலித்துள்ளாா். இந்நிலையில், அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் மோகன்ராஜ் இழுத்தடித்து வந்தாராம். இதுகுறித்து பெருந்துறை, சீலம்பட்டியைச் சோ்ந்த தனபால், மோகன்ராஜிடம் செவ்வாய்க்கிழமை தட்டிக் கேட்டுள்ளாா். மோகன்ராஜுக்கு ஆதரவாக வந்த வழக்குரைஞா் ரவி, அவரின் மகன் சூா்யா ஆகியோா் தனபாலை கண்டித்துள்ளனா்.

இந்நிலையில், ரவிக்கும், தனபாலுக்கும் செவ்வாய்க்கிழமை மாலையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ரவி கத்தியால் தனபாலின் வயிற்றில் குத்தியுள்ளாா். பலத்த காயமடைந்த அவா் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

தனபால் அளித்த புகாரின்பேரில், பெருந்துறை போலீஸாா் மோகன்ராஜ், ரவி, சூா்யா மீது வழக்குப் பதிவு செய்தனா். பெருந்துறை காவல் நிலையத்தில் வழக்குரைஞா் ரவி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இந்த வழக்கு தொடா்பாக மோகன்ராஜை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com