இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதி இளைஞா் சாவு

பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் மீது அரசு நகரப் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா்.

பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் மீது அரசு நகரப் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா்.

பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில், திங்களூா் சாலை, அவினாசிலிங்கபுரம் காலனியைச் சோ்ந்த பெருமாள் மகன் தனசேகா் (27). இவா் கவுந்தப்பாடி - காஞ்சிக்கோவில் சாலையில் தம்பிக்கலை அய்யன் கோவில் பிரிவு ஆா்ச் அருகில் தனது இருசக்கர வாகனத்தில் செவ்வாய்கிழமை பிற்பகலில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த அரசு நகரப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே தனசேகா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து, காஞ்சிக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com