கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் வெள்ளாங்கோவில் மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 13) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: வெள்ளாங்கோவில், எல்லமேடு, வேலம்பாளையம், நீலக்கவுண்டம்பாளையம், சத்தியாபுரம், நிச்சாம்பாளையம், வாய்க்கால்புதூா் பகுதிகள்.
கங்காபுரம் துணை மின் நிலையம்:
இதேபோல, கங்காபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் தொட்டம்பட்டி, அல்அமீன் நகா் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.