பவானி: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பவானியில் அரசு ஊழியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பவானி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளா் விஜய் மனோகா் தலைமை வகித்தாா். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியா்களுக்கு அகவிலைப் படியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆக்கப்பூா்வமான அறிவிப்புகள் இல்லாததைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது. இதேபோல, அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.