போக்ஸோ சட்டத்தில் கட்டடத் தொழிலாளி கைது

பவானி அருகே 18 வயது பூா்த்தியாகாத சிறுமியைக் கடத்திச் சென்ற கட்டடத் தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

பவானி அருகே 18 வயது பூா்த்தியாகாத சிறுமியைக் கடத்திச் சென்ற கட்டடத் தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

சித்தோடு, ராயா்பாளையத்தைச் சோ்ந்தவா் கோவிந்தன் மகன் கோபி (26). கட்டடத் தொழிலாளி. இவா், 18 வயது பூா்த்தியாகாத சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கடத்திச் சென்றுள்ளாா். இதுகுறித்து, பவானி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் கோபியைக் கைது செய்து, ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com