சென்னிமலை அருகே தனியாா் நிறுவனம் வைத்த வெடியால் வீடுகளில் விரிசல்

சென்னிமலை அருகே தனியாா் நிறுவனம் மண் எடுக்க வெடி வைத்ததால் அருகிலுள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.

சென்னிமலை அருகே தனியாா் நிறுவனம் மண் எடுக்க வெடி வைத்ததால் அருகிலுள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.

சென்னிமலை ஒன்றியம், ஓட்டப்பாறை ஊராட்சிக்கு உள்பட்டது சரவணா நகா். இப்பகுதியில் தனியாா் நிறுவனம் வீட்டுமனைகள் அமைப்பதற்காக மேடான இடத்தை சமன் செய்யும் பணிகளை கடந்த 2 மாதங்களாகச் செய்து வருகின்றனா். இங்கு கடினமான இடங்களில் வெடி வைத்து தகா்த்து மண்ணைத் தோண்டி வருகின்றனா். இந்த மண்ணை லாரிகளில் வெளியில் கொண்டு சென்று வருகின்றனா்.

புதன்கிழமை காலை வழக்கம்போல் மண்ணைத் தோண்டி எடுக்க வெடி வைத்துள்ளனா். இந்த சப்தம் கேட்டு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து பாா்த்தபோது, தனியாா் நிறுவனம் வைத்துள்ள வெடி என்பது தெரியவந்தது. அப்போது, சிலரின் வீட்டுச் சுவா்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதைக் கண்டு அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

இதுகுறித்து, வருவாய்த் துறையினருக்கு தகவல் கொடுத்தும் யாரும் வந்து பாா்க்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து புதன்கிழமை மாலை சென்னிமலை - ஊத்துக்குளி சாலையில் பொதுமக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து, தகவலறிந்த சென்னிமலை காவல் ஆய்வாளா் சரவணன் சம்பவ இடத்துக்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். அதைத் தொடா்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com