ஈரோடு: 246 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 8.61 லட்சம் மதிப்பில் அரசின் விலையில்லா மிதிவண்டிகளை எம்.எல்.ஏ.க்கள் வழங்கினா்.
ஈரோடு சி.எஸ்.ஐ. ஆண்கள், மகளிா் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 246 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 8.60 லட்சம் மதிப்பில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோா் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினா்.
நிகழ்ச்சியில், முன்னாள் மேயா் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயா் கே.சி.பழனிசாமி, பகுதி செயலாளா்கள் மனோகரன், ஜெகதீஷ், கேசவமூா்த்தி, தங்கமுத்து, ராமசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதைத் தொடா்ந்து, பெரியாா் நகா் பகுதியில் அதிமுக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் புள்ளி விவரங்களுடன் துண்டறிக்கைகளை எம்.எல்.ஏ.க்கள் பொதுமக்களிடம் வழங்கினா்.