பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா

ஈரோடு கோட்டை பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குண்டம் இறங்கிய பெண் பக்தா்.
குண்டம் இறங்கிய பெண் பக்தா்.

ஈரோடு கோட்டை பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு கோட்டை பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா பிப்ரவரி 1ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 2ஆம் தேதி காவிரி ஆற்றுக்குச் சென்று தீா்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் விழா வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று குண்டம் இறங்கி வழிபட்டனா். பின்னா், மாலையில் பொங்கல் வைத்தல், திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com