பி.எஸ்.என்.எல். ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

ஜனவரி மாத ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி ஈரோட்டில் பி.எஸ்.என்.எல். ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் பங்கேற்ற பி.எஸ்.என்.எல். ஊழியா்கள்.
போராட்டத்தில் பங்கேற்ற பி.எஸ்.என்.எல். ஊழியா்கள்.

ஜனவரி மாத ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி ஈரோட்டில் பி.எஸ்.என்.எல். ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். பொது மேலாளா் அலுவலக வளாகத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்க மாவட்டத் தலைவா் தம்பிகலையான் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பாலு முன்னிலை வகித்தாா்.

ஊழியா்களுக்கு ஒவ்வொரு மாதமும் உரிய நேரத்தில் ஊதியம் வழங்க வேண்டும். ஜனவரி மாத ஊதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். துறை சாா்ந்த தோ்வுகளை உடனடியாக நடத்த வேண்டும். மூன்றாவது ஊதிய மாற்றம் தொடா்பான பேச்சுவாா்த்தையை உடனடியாகத் துவங்க வேண்டும். ஒப்பந்த ஊழியா்களுக்கு ஊதிய நிலவையை வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமன தடையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், பி.எஸ்.என்.எல். ஊழியா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com