பெருந்துறையில் நாளை தோ்தல்பிரசாரக் கூட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

பெருந்துறையில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 21) நடைபெறும் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசுகிறாா்.

பெருந்துறையில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 21) நடைபெறும் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசுகிறாா்.

இதுகுறித்து ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளா் சு.முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களைப் பெற்று உரையாற்றி வருகிறாா்.

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சாா்பில் பெருந்துறை அருகே உள்ள கடப்பமடை கிராமத்தில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 21) பகல் 1 மணிக்கு பிரசாரக் கூட்டம் நடைபெறவுள்ளது.

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் திமுக ஆட்சி அமைந்த 100 நாள்களுக்குள் தீா்வு காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூட்டத்தில் பங்கேற்று மனுக்களை அளிக்கலாம்.

கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூா் கழக நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com