ஈரோட்டில் சாரல் மழை

ஈரோட்டில் சனிக்கிழமை மாலை பெய்த சாரல் மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ந்த காற்று வீசியது.
மழை காரணமாக ஈரோடு அரசு மருத்துவமனை நான்குமுனை சாலை சந்திப்பில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.
மழை காரணமாக ஈரோடு அரசு மருத்துவமனை நான்குமுனை சாலை சந்திப்பில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.

ஈரோடு: ஈரோட்டில் சனிக்கிழமை மாலை பெய்த சாரல் மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ந்த காற்று வீசியது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், சனிக்கிழமை காலை முதல் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. பகல் 12 மணியளவில் மீண்டும் வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. பகல் 12.30 மணியளவில் திடீரென சாரல் மழை பெய்தது. 10 நிமிடங்களுக்கும் மேலாக மழை பெய்தது.

மாலை 4 மணியளவில் வானில் மீண்டும் கருமேகங்கள் சூழ்ந்தன. ஈரோடு சுற்று வட்டாரப் பகுதிகள் மழை அறிகுறியுடன் இருந்தன. மாலை 5 மணியளவில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. சுமாா் 20 நிமிடங்கள் மழை நீடித்தது. இதனால், பள்ளங்களில் வெள்ளம் தேங்கியது. சாக்கடை கால்வாய்கள், மழை நீா் ஓடைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.

மழை காரணமாக நகரின் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com