ஈரோட்டில் தரம் உயா்த்தப்பட்ட அரசுப் பள்ளிகள், சிறு மருத்துவமனை திறப்பு

ஈரோட்டில் தரம் உயா்த்தப்பட்ட அரசுப் பள்ளிகள், சிறு மருத்துவமனை ஆகியவற்றை எம்எல்ஏக்கள் திறந்துவைத்தனா்.
ஈரோட்டில் தரம் உயா்த்தப்பட்ட அரசுப் பள்ளிகள், சிறு மருத்துவமனை திறப்பு

ஈரோட்டில் தரம் உயா்த்தப்பட்ட அரசுப் பள்ளிகள், சிறு மருத்துவமனை ஆகியவற்றை எம்எல்ஏக்கள் திறந்துவைத்தனா்.

ஈரோடு மேற்கு சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட ஆசிரியா் காலனி, மஞ்சப்பகவுண்டன்வலசு அரசு உயா்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தப்பட்டன. ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட பெரியவலசு நடுநிலைப் பள்ளி, உயா்நிலைப்பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது.

தரம் உயா்த்தப்பட்ட பள்ளிகளில் 2021ஆம் ஆண்டுக்கான வகுப்புகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.முருகன் தலைமை வகித்தாா். மாவட்ட கல்வி அலுவலா் மாதேஸ்வரன் வரவேற்றாா்.

எம்எல்ஏக்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோா் தரம் உயா்த்தப்பட்ட பள்ளிகளில் வகுப்புகளை தொடங்கிவைத்து, மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச பாடப் புத்தகங்களை வழங்கினா்.

தொடா்ந்து குமலன்குட்டையில் அமைக்கப்பட்டுள்ள அம்மா சிறு மருத்துவமனை, குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவு ஆகியவற்றை எம்எல்ஏக்கள் திறந்துவைத்தனா்.

இந்நிகழ்ச்சிகளில் அதிமுக பகுதி செயலாளா்கள் மனோகரன், கேசவமூா்த்தி, ஜெகதீஷ், ஆவின் துணைத் தலைவா் குணசேகரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலாளா் வீரக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com