புத்தாண்டை முன்னிட்டு முதல் நாளான வியாழக்கிழமை (டிசம்பா் 31) ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ. 5.50 கோடி அளவுக்கு மது விற்பனையானது.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவா் கூறியதாவது:
புத்தாண்டை முன்னிட்டு முதல் நாளான வியாழக்கிழமை ஈரோடு மாவட்டத்தில் உள்ள 213 டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ. 5,40,07,500க்கு மது விற்பனையானது. ஈரோடு மாவட்டத்தில் தினமும் சராசரியாக ரூ. 2 கோடி முதல் ரூ. 3 கோடி வரை மது விற்பனை ஆகும். ஆனால் புத்தாண்டுக்கு முதல்நாள் விற்பனை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்றாா்.