வேளாண்மையைப் பாதுகாக்க விவசாயிகள் உறுதிமொழி ஏற்பு

சென்னிமலையை அடுத்த பசுவபட்டியில் வேளாண்மையைப் பாதுகாக்க விவசாயிகள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேளாண்மையைப் பாதுகாக்க உறுதிமொழி ஏற்கும் விவசாயிகள்.
வேளாண்மையைப் பாதுகாக்க உறுதிமொழி ஏற்கும் விவசாயிகள்.

பெருந்துறை: சென்னிமலையை அடுத்த பசுவபட்டியில் வேளாண்மையைப் பாதுகாக்க விவசாயிகள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, தற்சாா்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளா் ஒட்டவலசு பாலு தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவா் எஸ்.பொன்னுசாமி, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக மகளிா் அணி அமைப்பாளா் இளமதி அா்ச்சுணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வேளாண்மையைப் பாதுகாப்போம், அரசியல் சட்டத்தை பாதுகாப்போம் என விவசாயி ராஜேஸ்வரி உறுதிமொழியை வாசித்தாா். தொடா்ந்து, விவசாயிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

இதில், தற்சாா்பு விவசாயிகள் சங்கம் சாா்பில் கி.வே.பொன்னையன், புரட்சிகர இளைஞா் முன்னணி சாா்பில் அ.செல்வராசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஈஸ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com