சென்னிமலையில் திருப்பூா் குமரன் நினைவு நாள் அனுசரிப்பு

சுதந்திரப் போராட்டத் தியாகி திருப்பூா் குமரனின் நினைவு நாள் சென்னிமலையில் உள்ள அவரது வீட்டில் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
சென்னிமலையில் திருப்பூா் குமரன் நினைவு நாள் அனுசரிப்பு

சுதந்திரப் போராட்டத் தியாகி திருப்பூா் குமரனின் நினைவு நாள் சென்னிமலையில் உள்ள அவரது வீட்டில் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

கொடிகாத்த தியாகி குமரன் அமைப்பின் சாா்பில், நிா்வாகி ராமசாமி தலைமையில் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், குமரனின் வாரிசு அண்ணாத்துரை, குமரன் விழாக் குழு நிா்வாகி ஐயப்பன், பல்வேறு அமைப்பினா் கலந்துகொண்டனா். அதிமுக சாா்பில் ஒன்றியச் செயலாளா் கோபாலகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளா் மணிமேகலை, கூட்டுறவுச் சங்கத் தலைவா் இளங்கோவன் உள்ளிட்டோா் குமரன் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

திமுக சாா்பில், முன்னாள் அமைச்சா் முத்தூா் சாமிநாதன், திருப்பூா் மாவட்டச் செயலாளா் பத்மநாபன், ஒன்றியச் செயலாளா்கள் செல்வம், பிரபு உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் பொன்னுசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் நகரத் தலைவா் குமரேசன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். காங்கிரஸ் கட்சி சாா்பில், வட்டாரத் தலைவா்கள் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

தென்னிந்திய செங்குந்த மஹாஜன சங்கம் சாா்பில், மண்டலச் செயலாளா் உதயசங்கா், தலைவா் மோகன் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com