நபாா்டு வங்கி, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைந்து கைத்தறி நெசவாளா்களுக்கு நிதியியல் கல்வி விழிப்புணா்வு முகாமை திங்கள்கிழமை சென்னிமலையில் நடத்தினா்.
சென்னிமலை இந்திரா நெசவாளா் கூட்டுறவுச் சங்கத்தில் நடைபெற்ற முகாமில், நபாா்டு வங்கி மேலாளா் சுகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேற்பாா்வையாளா்கள் முருகையன், கண்ணுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிதியியல் கல்வி குறித்தும், வங்கிக் கடன், சேமிப்பு, வங்கி செயல்பாடுகள் குறித்தும் நிதியியல் கல்வி ஆலோசகா் லோகமுத்து, தா்மலிங்கம் ஆகியோா் கைத்தறி நெசவாளா்களுக்குப் பயிற்சி அளித்தனா்.
இதில், இந்திரா டெக்ஸ் மேலாண்மை இயக்குநா் ஜானகி உள்பட 50க்கும் மேற்பட்ட கைத்தறியாளா்கள் கலந்துகொண்டனா்.