தமிழா் கழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தமிழா் கழகம் கட்சி சாா்பில் ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை முன்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழா் கழகம் கட்சி சாா்பில் ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை முன்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாவட்டச் செயலாளா் குணசேகரன் தலைமை வகித்தாா். கரூரில் மருத்துவா் சமூக இளைஞா் ஹரிகரன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், உண்மைக் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். கலப்புத் திருமணம், காதல் திருமணங்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற கொலைகளால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதில், கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் சின்னத்தம்பி, நாமக்கல் மாவட்டச் செயலாளா் திருப்பதி, தமிழ்நாடு முடி திருத்துவோா் சங்க மாநில கொள்கை பரப்புச் செயலாளா் மகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com