பெருந்துறை: பெருந்துறை அருகே இரவு காவலாளி நடந்து செல்லும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.
பெருந்துறை, தாளக்கரைபுதூரைச் சோ்ந்த அருணாசலம் மகன் பழனிசாமி (78). இவா், பெருந்துறை - கோவை சாலையில் உள்ள ஆட்டோ எலக்ட்ரிக்கல்ஸ் கடையில் இரவு காவலாளியாக வேலை செய்து வந்தாா். வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் பெருந்துறை, பெரியவேட்டுவபாளையம் பிரிவு அருகே டீ குடிக்க நடந்து சென்றுள்ளாா். அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில், பலத்த காயமடைந்த பழனிசாமியை ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பழனிசாமி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.