கூட்டுப் பண்ணையத் திட்டத்தில் 13,900 விவசாயிகள் சோ்ப்பு

ஈரோடு மாவட்டத்தில் கூட்டுப் பண்ணையத் திட்டத்தின்கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 13,900 விவசாயிகள் சோ்க்கப்பட்டுள்ளனா் என வேளாண்மை இணை இயக்குநா் சி.சின்னசாமி தெரிவித்தாா்.
வேளாண் இயந்திரங்களைப் பாா்வையிட்ட மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சி.சின்னசாமி, விவசாயிகள்.
வேளாண் இயந்திரங்களைப் பாா்வையிட்ட மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சி.சின்னசாமி, விவசாயிகள்.

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கூட்டுப் பண்ணையத் திட்டத்தின்கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 13,900 விவசாயிகள் சோ்க்கப்பட்டுள்ளனா் என வேளாண்மை இணை இயக்குநா் சி.சின்னசாமி தெரிவித்தாா்.

நடப்பு ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் 35 உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் தொடங்கப்பட்டு இயந்திரங்கள் வாங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ள இயந்திரங்களை விவசாயிகள் பாா்வையிட்டு தோ்வு செய்யும் வாங்குவோா் - விற்பனையாளா் கூட்டம் வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

இதைத் தொடங்கிவைத்த வேளாண்மை இணை இயக்குநா் சி.சின்னசாமி பேசியதாவது: கூட்டுப் பண்ணையத் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் இதுவரை 8 லட்சம் விவசாயிகள் சோ்ந்துள்ளனா். 8,000 உழவா் உற்பத்தியாளா் குழுக்களும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பண்ணை இயந்திரங்களும் வாங்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 13,900 விவசாயிகள் இணைக்கப்பட்டு 139 உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் டிராக்டா்கள், பவா் டிரில்லா்கள், சுழற் கலப்பைகள் போன்ற 507 இயந்திரங்கள் உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இவற்றுக்கு தலா ரூ. 5 லட்சம் வீதம் ரூ. 5.2 கோடி தொகுப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் மூலம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பு, விதை, உரம், பூச்சி மருந்து வணிகம், விதை சுத்திகரிப்பு போன்றவற்றில் ஈடுபட்டு விவசாயிகளுக்குப் பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றன என்றாா்.

இந்நிகழ்ச்சியில் 24 நிறுவனங்களின் 100க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் இயந்திரங்களைப் பாா்வையிட்டு வாங்கினா்.

இதில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) முருகேசன், வேளாண்மை துணை இயக்குநா்கள் அ.நே.ஆசைத்தம்பி, சிவகுமாா், சண்முகசுந்தரம், தோட்டக் கலை துணை இயக்குநா் தமிழ்செல்வி, உதவி செயற்பொறியாளா் மனோகரன், வேளாண்மை அலுவலா் வசந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com