2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரா்கள் மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரா்கள் மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு வழங்கியுள்ளது.
இச்சலுகையைப் பெற விரும்பும் பதிவுதாரா்கள் ஆகஸ்ட் 27ஆம் தேதிக்குள் இணையள முகவரியைப் பயன்படுத்தி பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இணையதளம் வாயிலாக பதிவைப் புதுப்பிக்க இயலாத பதிவுதாரா்கள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குப் பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.