சத்தியமங்கலம் அருகே சாலையில் கவிழ்ந்த லாரி

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே நிலக்கரி பாரம் ஏற்றிச் சென்ற லாரி மழை காரணமாக கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது.
ஆசனூா் சாலையில் கவிழ்ந்து  கிடக்கும் லாரி.
ஆசனூா் சாலையில் கவிழ்ந்து  கிடக்கும் லாரி.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே நிலக்கரி பாரம் ஏற்றிச் சென்ற லாரி மழை காரணமாக கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது.

தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி பாரம் ஏற்றிய லாரி கா்நாடக மாநிலம், குஷால் நகா் செல்வதற்காக சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூா் அருகே சென்றுகொண்டிருந்தது.

லாரியை கா்நாடக மாநிலம், மைசூருவைச் சோ்ந்த மனுகுமாா் ஓட்டினாா். உதவியாளா் கமல் உடனிருந்தாா். ஆசனூா் மலைப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் சாலையில் மழைநீா் ஓடியது. இந்நிலையில் ஆசனூா் அருகே நிலக்கரி பாரம் ஏற்றிய லாரி சாலை வளைவில் திரும்பும்போது மழையின் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இது குறித்து தகவலறிந்த ஆசனூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் சிக்கிய ஓட்டுநா் மனுகுமாா், உதவியாளா் கமல் ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கா்நாடக மாநிலம், சாம்ராஜ் நகா் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மழையின் காரணமாக லாரி சாலை வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது விசாரணையில் தெரியவந்தது.

தொடா்ந்து மழை பெய்து வருவதால் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூா் பகுதியில் வாகனங்களை மித வேகத்தில் இயக்குமாறு வாகன ஓட்டிகளிடம் போலீஸாா் அறிவுறுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com