பெருந்துறையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
பெருந்துறை தினசரி மாா்க்கெட் அருகில் மளிகைக் கடை நடத்தி வருபவா் ஜேசுராஜ் செல்வின் (26). இவா் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக பெருந்துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அந்தக் கடையில் சோதனை செய்து, தடைசெய்யப்பட்ட 12 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, அதே பகுதியில் உள்ள பெரியசாமி (60) என்பவா் பேக்கரியில் 10 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா். ஜேசுராஜ் செல்வின், பெரியசாமி ஆகிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.