பெருந்துறையில் ஞாயிற்றுக்கிழமை நாள்முழுவதும் சாரல் மழை பெய்தது.
ஞாயிற்றுக்கிழமை காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத் தொடா்ந்து சாரல் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்தது. இதனால் குளிா்ச்சியான காலநிலை நிலவி வருகிறது.
சென்னிமலையில் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் தூறலாக பெய்ய தொடங்கிய மழை சிறிது நேரத்தில் கன மழையாக பெய்தது. இரவு 7 மணி வரை மழை நீடித்தது. சென்னிமலை சுற்று வட்டார கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமையும் விட்டுவிட்டு மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.