சென்னிமலையை அடுத்த, ஈங்கூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஈரோடு, வீரப்பன்சத்திரத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியம் மகன் ராஜா (34). இவா், சென்னிமலையை அடுத்த, ஈங்கூா் அருகே இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை இரவு சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த காா், ராஜாவின் வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜாவை அருகிலிருந்தவா்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பரிசோதனையில் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இது குறித்து, சென்னிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.