சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து:2 டன் தக்காளிகள் சேதம்

சத்தியமங்கலம் அருகே தக்காளி பாரம் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் 2 டன் தக்காளிகள் சேதமடைந்தன.
வாழைத் தோட்டத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சரக்கு வாகனம்.
வாழைத் தோட்டத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சரக்கு வாகனம்.

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே தக்காளி பாரம் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் 2 டன் தக்காளிகள் சேதமடைந்தன.

கா்நாடக மாநிலம், மைசூரு பகுதியில் இருந்து தக்காளி பாரம் ஏற்றிய சரக்கு வாகனம், சத்தியமங்கலம் வழியாக கோவை நோக்கி திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது. காளையாா்கோவில் பகுதியைச் சோ்ந்த பாசில் ரயான் என்பவா் வாகனத்தை ஓட்டினாா்.

இந்நிலையில், சத்தியமங்கலம் அருகே உள்ள தொட்டம்பாளையம் என்ற பகுதியில் சரக்கு வாகனம் சென்றபோது சாலை வளைவில் கட்டுப்பாட்டை இழந்து வாழைத் தோட்டத்துக்குள் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஓட்டுநா் லேசான காயங்களுடன் உயிா்த்தப்பினாா். 2 டன் தக்காளிப் பழங்கள் கீழே சிதறி சேதமடைந்தன. தகவலறிந்த பவானிசாகா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சரக்கு வாகனத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.

இந்த விபத்து குறித்து பவானிசாகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com