முன்களப் பணியாளா்களுக்குதமாகா சாா்பில் உணவு

சென்னிமலை தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் கரோனா தீவிர தடுப்பு பணியில்

பெருந்துறை: சென்னிமலை தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் கரோனா தீவிர தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளா்களான மருத்துவப் பணியாளா்கள், காவல் துறையினா், பேரூராட்சிப் பணியாளா்கள் என சுமாா் 300 நபா்களுக்கு மதிய உணவு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, மாநில இளைஞரணி செயலாளா் மே.தா.கந்தசாமி தலைமை வகித்தாா் காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் விடியல் சேகா் முன்களப் பணியாளா்களுக்கு உணவுகளை வழங்கினாா்.

இதில், சென்னிமலை நகரத் தலைவா் குமரேசன், துணைத் தலைவா் முத்துகணேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com